வட்டார பொதுக்குழு 21.07.2011















தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கீழ்வேளூர் வட்டார பொதுக்குழு 21.07.2011 வலிவலம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் க.இளங்கோவன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் ரெ.நாகராஜன், வட்டார பொருளாளர் சு.சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சா.வைத்தியநாதன், மாவட்ட மகளிரணி செயலாளர் க.ஜெயந்தி, வட்டார மகளிரணி செயலாளர் ச.முத்தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் அ.அந்தோணி ஞானராஜ் வரவேற்புரை ஆற்றினர். மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் திறந்து வைத்த மாநில அமைப்பின் ரூ 74 லட்ச கட்டிடத்தினை கடின உழைப்பாலும் இடைவிடாத இயக்கப்பணியின் மூலமாகவும் பிரம்மாண்டமாக அமைத்து திறப்பு விழாவினை சிறப்பாக நடத்திய மாநில பொதுச்செயலாளர் திரு.ச.அப்துல் மஜீத் அவர்களுக்கும் மாநில பொறுப்பாளர்களுக்கும் நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயக்க உறுப்பினர்களின் பணிகள் நலன்கள் குறித்து துணைத் தலைவர் ம.பூபாலன் , துணை செயலர் செ.அருள்செல்வம் ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பிரதிநிதி சு.பாலாஜி நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP