டிசம்பர் 2o11 இல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் அதை தொடர்ந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தேர்தல்
இயக்கத்தின் நிறுவனத்தலைவராக
ஆசிரியப் பேரின காவலர் திரு.அப்துல் மஜீத் அவர்களும்
மாநில பொது
ச்செயலாளராக திரு.தாஸ் அவர்களும்
மாநிலத் தலைவராக திரு.அண்ணாத்துரை அவர்களும்
மாநில பொருளாளராக திரு.சரவணன் அவர்களும்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கீழ்வேளூர் ஒன்றியத்திலிருந்து திரு.க.இளங்கோவன் அவர்கள் மாநில துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில பொறுப்பாளர்கள் அனைவருக்கும் கீழ்வேளூர் ஒன்றிய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.


1. NON-SSA பள்ளிகளில் 6-8 வகுப்புகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் இயக்குனரின் திருத்தப்பட்ட செயல்முறைகளில் உள்ளவாறு பட்டதாரி ஆசிரியர் மாற்றி பதவி உயர்வின் மூலமாக செப்டம்பர் 2011 கலந்தாய்வில் நிரப்பப்பட வேண்டிய , ஆனால் நிரப்பப்படாத பணியிடங்களையும் ,
2. மாவட்ட மாறுதலில் காலியான பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று முறைப்படி அப்பணியிடத்திற்கு தகுதியுடைய ஆசிரியர்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பக் கோரியும்,
3. SSA பள்ளிகளில் அளிக்கப்பட வேண்டிய நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பணியிடங்கள் மற்றும் பட்டதாரி பணியிடங்களை உடனடியாக அளித்து அப்பணியிடங்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று தகுதியுடைய ஆசிரியர்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பக் கோரியும்,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து இயக்குனரிடம் பேசிவரும் மாநில பொதுச்செயலாளர் திரு ச.அப்துல் மஜீத் அவர்களிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று மேற்கண்ட பணியிடங்கள் மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நிலையில் உள்ள தகுதியுடைய ஆசிரியர்கள் இது குறித்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.



கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP