23.09.2013 பேரணி

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள் 23.09.2013 காலையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி சென்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் 5200 என்பதை மாற்றி 9300 என வழங்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்வு நிலை, சிறப்பு நிலை, சூப்பர் நிலைக்குரிய தனி ஊதிய விகிதம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை கோஷம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.


கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP